Home
154

எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம்

          எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம் தேவா
என்றென்றும் நான் பாடுவேன் (2)
இந்நாள் வரை என் வாழ்விலே (1)
நீர் செய்த நன்மைக்கே

(எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம்...)

வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே (4)

(எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம்...)

காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுமே (4)

(எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம்...)

நீரினில் வாழ்கின்ற யாவும்
இந் நிலத்தின் ஜீவராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உமைப் போற்றுமே (4)

(எண்ணில்லடங்கா ஸ்தோத்திரம்...)
        

Listen to the Song

Song 154
0:00 / 0:00
Speed:

Share this Song