Home
158

ஆயனே தூயனே வாரும்

          இந்த ஆயனே தூயனே வாரும்
பாவியை உம் மந்தையில் சேரும் (1)
பாதைகள் மாறியே போனேன் - உலக
மாயையால் பாவியாய் ஆனேன்

இயேசுவே நாதரே வாரும் - எங்கள்
பாடலின் வேண்டுதலைக் கேளும் (1)

தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே - உம்மை
நாடி வந்து பாடுகின்றேன் கேளுமே (2)
மானிடர் சுமைகளைச் சிலுவையாய் - நீர்
சுமந்ததை இப் புவி அறியுமே (2)
கேளுங்கள் தரப்படும் என்றவர் - நீர்
கேடுகள் அழிக்கவே பிறந்தவர்

(இயேசுவே நாதரே வாரும்...)

நெஞ்சிலே நிம்மதி இல்லையே -  உம்மைக்
கெஞ்சினேன் ஆறுதல் தாருமே (2)
வஞ்சகர் வலைதனில் மாயமே - அதை
அறுத்திடும் இயேசு உம் நாமமே (2)
தாயினை மிஞ்சிடும் அன்பையே - உம்மில்
காண்கிறேன் கர்த்தரே உண்மையே - என் (2)

(இயேசுவே நாதரே வாரும்...)
        

Listen to the Song

Song 158
0:00 / 0:00
Speed:

Share this Song