158
ஆயனே தூயனே வாரும்
இந்த ஆயனே தூயனே வாரும் பாவியை உம் மந்தையில் சேரும் (1) பாதைகள் மாறியே போனேன் - உலக மாயையால் பாவியாய் ஆனேன் இயேசுவே நாதரே வாரும் - எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும் (1) தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே - உம்மை நாடி வந்து பாடுகின்றேன் கேளுமே (2) மானிடர் சுமைகளைச் சிலுவையாய் - நீர் சுமந்ததை இப் புவி அறியுமே (2) கேளுங்கள் தரப்படும் என்றவர் - நீர் கேடுகள் அழிக்கவே பிறந்தவர் (இயேசுவே நாதரே வாரும்...) நெஞ்சிலே நிம்மதி இல்லையே - உம்மைக் கெஞ்சினேன் ஆறுதல் தாருமே (2) வஞ்சகர் வலைதனில் மாயமே - அதை அறுத்திடும் இயேசு உம் நாமமே (2) தாயினை மிஞ்சிடும் அன்பையே - உம்மில் காண்கிறேன் கர்த்தரே உண்மையே - என் (2) (இயேசுவே நாதரே வாரும்...)