16
தேவனே நான் ஊமதண்டையில்
தேவனே நான் ஊமதண்டையில் - இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில் (2) மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் (தேவனே நான் ஊமதண்டையில்...) யாக்கோபைப் போல் போகும் பாதையில் - பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் கல்லிலே சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா (தேவனே நான் ஊமதண்டையில்...) பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்ற பண்ணுமையா எந்தன் தேவனே கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் ஊமதண்டை அருமையாய் என்னை அழைக்கும் அன்பின் தூதராகச் செய்யும் (தேவனே நான் ஊமதண்டையில்...) நித்திரையில் என்றும் விழித்து - காலை எழுந்து கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன் இத்தரையில் உந்தன் வீடாய் என் துயர் கல் நாட்டுவேனே எந்தன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் (தேவனே நான் ஊமதண்டையில்...) ஆனந்தமாய் செட்டை விரித்து - பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப்போயினும் வானமண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும் மகிழ்வுறும் காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்ட ிச் சேர்வேன் (தேவனே நான் ஊமதண்டையில்...)