166
தாயானவள் மறந்தாலும்
தாயானவள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை சேயாகுமுன் தெரிந்தழைத்தீர் நீர் என்னை விடுவதில்லை (2) தஞ்சம் தஞ்சம் இயேசு எங்கள் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை (2) கண்ணை இமை காப்பதுபோல் கர்த்தர் நம்மைக் காத்திடுவார் (2) தஞ்சம் தஞ்சம் இயேசு எங்கள் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) (தாயானவள் மறந்தாலும்...) உள்ளங்கையில் வரைந்தவரை ஒரு நாளும் கை விடாதவரை (2) உயிருள்ள நாள் வரையில் நான் கீர்த்தனம் பண்ணிடுவேன் (2) தஞ்சம் தஞ்சம் இயேசு எங்கள் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) (தாயானவள் மறந்தாலும்...)