170
நிலையென்று வாழ்வை
நிலையென்று வாழ்வை நினைத்திடாமல்
நிமிர்ந்து நீ சிலுவையைப் பாரு
இறைமகன் இயேசுவே எனைக் காரும்
என்று இதயத்தால் அவரையே கேளு
(நிலையென்று வாழ்வை...)
நித்திய வாழ்வுக்குச் சத்தியம் தந்திடும்
தேவனின் திருமுகம் பாரு (2)
வார்த்தையைத் தந்துன்னை மீட்டிடும் தெய்வம் என்
இயேசுவைப் போல் வேறு யாரு (2)
(நிலையென்று வாழ்வை...)
அலைகின்ற மனதிற்கு ஆறுதல் தந்திட
ஆண்டவர் இயேசுவைத் தேடு (2)
பாவக்கறைதனைக் கழுவிடும் பரமனின்
மைந்தனின் நாமத்தைப் பாடு (2)
(நிலையென்று வாழ்வை...)
ஓடியே வந்தவர் காலடியில்
முழந்தாளிட்டு மன்னிப்புக் கேளு (2)
நாடியே வந்துன்னை வாரியே அணைத்தவர்
மந்தையில் சேர்ப்பார் நீ பாரு (2)
(நிலையென்று வாழ்வை...)