Home
20

மகிழ்வோம் மகிழ்வோம்

          மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் (2)
ஆ...ஆ...ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே

(இந்தப் பார்தலத்தின்...)

சின்னஞ் சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் (2)
ஆ... ஆ... ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே

(தமது ஜீவனை எனக்கும்...)


எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரை காத்துக்கொள்வேன் (2)
ஆ... ஆ... ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே

(என்னை நம்பி அவர்...)

அவர் வரும் நாளிலே என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன் (2)
ஆ... ஆ... ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே

(அவர் சமூகமதில் அங்கே...)
        

Listen to the Song

Song 20
0:00 / 0:00
Speed:

Share this Song