210
பயப்படாதே என்று சொன்ன
பயப்படாதே என்று சொன்ன தேவனே
என் பயத்தைப் போக்குமே
கலங்காதே என்றுரைத்த தேவனே
என் கண்ணீரைத் துடைத்திடுமே (4)
அல்லேலூயா ஸ்தோத்திரம்
அல்லேலூயா ஸ்தோத்திரம் (2)
திசையறியாது தியங்கும் ஓர் படகு நான்
கலங்கரை விளக்காய் திசை காட்டும் ஐயா (2)
திகையாதே என்றுரைத்தீர் – அப்பா (1)
நீரே என் அடைக்கலம் அறிந்தேனைய்யா (1)
(பயப்படாதே என்று...)
பெலவீனத்தில் என் பலன் பூரணமாய் விளங்கும் என்றீர்
என் கிருபை உனக்குப் போதும் என்றீரே (2)
எப் பக்கம் நோக்கினும் துன்பம் சூழினும் (1)
உம் பாதம் ஒன்றை என் தஞ்சம் (1)
(பயப்படாதே என்று...)