39
ஆனந்த துதி ஒலி
ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஐனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ... (2) மகிமைப் படுத்துவேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கறையில்லா தேவனின் வாக்கு - ஆ... (2) (ஆனந்த துதி ஒலி...) விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகர் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகளறுந்திடும் விடுதலைப் பெருவிழா காண்போம் -ஆ… (2) (அனந்த துதி ஒலி...) பார் போற்றும் தேவன் நம் தேவன் பாரினில் வேறில்லை பாக்யம் நீர் எந்தன் ஜனங்கள் என்றாரே வேறென்ன வாழ்வினில் வேண்டும் பிள்ளைகளும் சபையும் பிதா முன்னே நிலைக்கும் பரிசுத்தர் மாளிகை எழும்பும் -ஆ... (2) (ஆனந்த துதி ஒலி...)