Home
40

இருள் சூழ்ந்த லோகத்தில்

          இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப்பொழுதும் தூங்காமல் (2)
கண்மணி போல என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே (2)
கானங்களால் நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன் (2)

நான் அஞ்சேன் நான் அஞ்சேன்
என் இயேசு என்னோடிருப்பதால் (2)

மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில் (2)
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினாரே தம் கோலினால் (2)
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் (2)

(நான் அஞ்சேன் நான்...)

அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும் (2)
கடல் மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார் (2)
ஆடல் நீக்கி அவர்
அமைதிப்படுத்தினார் (2)

(நான் அஞ்சேன் நான்...)
        

Listen to the Song

Song 40
0:00 / 0:00
Speed:

Share this Song