42
திருப்பாதம் நம்பி வந்தேன்
திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தம தன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே (திருப்பாதம் நம்பி வந்தேன்...) இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே (2) சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்கு தங்கிடுவேன் (திருப்பாதம் நம்பி வந்தேன்...) என்னை நோக்கி கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் (2) கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே (திருப்பாதம் நம்பி வந்தேன்...) என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் (2) உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே (திருப்பாதம் நம்பி வந்தேன்...) உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் (2) உமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுமே (திருப்பாதம் நம்பி வந்தேன்...)