5
எந்நாளுமே துதிப்பாய்
எந்நாளுமே துதிப்பாய் -என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் இந் நாள் வரையிலே உன்னதனார் செய்த (1) எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது (எந்நாளுமே துதிப்பாய்...) பாவங்கள் எத்தனையோ - நினையாதிருந்தார் உன் பாவங்கள் எத்தனையோ பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் (1) பாரினில் வைத்த மாதயவை நினைத்து (எந்நாளுமே துதிப்பாய்...) எத்தனையோ கிருபை - உன் உயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனை முடி சூட்டினதுமன்றி (1) செத்திடாதபடி ஜீவனை மீட்டதால் (எந்நாளுமே துதிப்பாய்...) பூமிக்கும் வானத்துக்கும் -உள்ள தூரம் போலவே பூமிக்கும் வானத்துக்கும் சாமி பயமுள்ளவர் மேல்அவர் அருள் (1) சாலவும் தங்குமே சத்தியமேயிது (எந்நாளுமே துதிப்பாய்...) தந்தை தன் பிள்ளைகட்கு - தயவோடிரங்காரோ தந்தை தன் பிள்ளைகட்கு எந்த வேளையும் அவரோடு தங்கினால் (1) சொந்தம் பாராட்டியே தூக்கி சுமப்பாரே (எந்நாளுமே துதிப்பாய்...)