Home
5

எந்நாளுமே துதிப்பாய்

          எந்நாளுமே துதிப்பாய் -என் ஆத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந் நாள் வரையிலே உன்னதனார் செய்த (1)
எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது

(எந்நாளுமே துதிப்பாய்...)

பாவங்கள் எத்தனையோ - நினையாதிருந்தார் உன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் (1)
பாரினில் வைத்த மாதயவை நினைத்து

(எந்நாளுமே துதிப்பாய்...)

எத்தனையோ கிருபை - உன் உயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி (1)
செத்திடாதபடி ஜீவனை மீட்டதால்

(எந்நாளுமே துதிப்பாய்...)

பூமிக்கும் வானத்துக்கும் -உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல்அவர் அருள் (1)
சாலவும் தங்குமே சத்தியமேயிது

(எந்நாளுமே துதிப்பாய்...)

தந்தை தன் பிள்ளைகட்கு - தயவோடிரங்காரோ
தந்தை தன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால் (1)
சொந்தம் பாராட்டியே தூக்கி சுமப்பாரே

(எந்நாளுமே துதிப்பாய்...)
        

Listen to the Song

Song 5
0:00 / 0:00
Speed:

Share this Song