Home
58

இயேசுவை நம்பினோர் மாண்ட

          இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றுன்னை இரட்சிப்பார்
பங்கம் வராதுன்னை ஆதரிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை தேற்றிடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
என்றென்றும் காத்துன்னை நடத்துவார்

கல்லுகள் முள்ளுகள் பாதையிலே
தொல்லைகள் துக்கங்கள் நெஞ்சத்திலே
எல்லாம் எதிர்த்தாலும் அஞ்சிடாதே
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார்

(நெஞ்சமே நீ அஞ்சிடாதே...)

வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவரே
வாருங்கள் இயேசுவின் பாதத்தண்டை
உங்களின் பாரத்தைத் தான் சுமந்து
நித்திய ஆறுதல் தருவேன் என்றார்

(நெஞ்சமே நீ அஞ்சிடாதே...)
        

Listen to the Song

Song 58
0:00 / 0:00
Speed:

Share this Song