Home
69

குருசினில் தொங்கி குருதியும்

          குருசினில் தொங்கி குருதியும் வடிய
கொல்கொதா மலை தனிலே - நம்
குரு இயேசு ஸ்வாமி கொடுந்துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்தைய்யோ - தீயர்
திருக் கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ

(குருசினில் தொங்கி...)

பாதகர் நடுவில் பாவியினேசன்
யூத பாதகன் போல் தொங்க - யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை

(குருசினில் தொங்கி...)

சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ - தேவ
சுந்தர மைந்தன் உயிர் விடும் காட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ தீயர்

(குருசினில் தொங்கி...)

ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே
தீட்டிய தீட்சைக் குருதியும் ஐலமும் - அவன்
திறந் தூற் றோடுது பார்

(குருசினில் தொங்கி...)

எருசலேம் மாதே பதறி நீ யழுது
ஏங்கிப் புலம்பலையோ - நின்
எருசலையதிபன் இளமணவாளன்
எடுத்த கோலமிதோ

(குருசினில் தொங்கி...)
        

Listen to the Song

Song 69
0:00 / 0:00
Speed:

Share this Song