Home
80

உள்ளமெல்லாம் உருகுதையோ

          உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இல்லையே

கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டிரே

எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் இயேசையா
எத்தனையாய் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்

இரத்தம் சிந்த வைத்தனே நான்
அத்தனையும் என் பாவமல்லோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் சேவையே (4)
        

Listen to the Song

Song 80
0:00 / 0:00
Speed:

Share this Song